80 Club விடுதியை திறந்து வைத்த பிரதமர்

#Mahinda Rajapaksa #Colombo
Prathees
2 years ago
80 Club விடுதியை திறந்து வைத்த பிரதமர்

கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டது.

எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும் முகமாக பிரதமர் அவ்வளாகத்தினை மின் விளக்குகளினால் ஒளிரச் செய்ததுடன், நினைவுப் பலகையையும் திறந்து வைத்து சிறப்பு விருந்தினர் புத்தகத்திலும் பிரதமர் கையெழுத்திட்டார்.

இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உதய நாணயக்கார அவர்களினால் எயிட்டி கிளப் தகவல் சிற்றேடு பிரதமருக்கு வழங்கப்பட்டது.

புனரமைப்பு பணிகளை மேற்கொண்டமைக்காக கடற்படை கொமடோர் எச்.எஸ்.பாலசூரிய அவர்களுக்கு பிரதமரினால் நினைவு பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.

எயிட்டி கிளப் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டமை தொடர்ந்து அதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் புனரமைப்பு பணிகளை கடற்படையினர் பொறுப்பேற்று முன்னெடுத்தனர்.

கண்டி குயின்ஸ் ஹோட்டலின் அறை எண் 80-இன் உறுப்பினர்கள் சிலர் முதலாவது கூட்டத்தை நடத்தி ஆரம்பித்து வைத்தமையால் இது எயிட்டி கிளப் எனும் பெயரில் அறியப்படுகிறது. பின்னர் இது கொழும்பு 07 சுதந்திர மாவத்தையில் நிறுவப்பட்டது.

1971 கலவரத்தின் காரணமாக அப்போதைய அரசாங்கம் இவ்வளாகத்தை இலங்கை இராணுவத்திற்கு ஒப்படைத்தது. 1978ஆம் ஆண்டு மீண்டும் அரசாங்கத்தினால் எயிட்டி கிளப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

2020 நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்படும் வரை இதன் பராமரிப்பு நடவடிக்கைகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதற்கமைய தற்போது எயிட்டி கிளப் அலங்காரமான நிறைவை பெற்றுள்ளது.

இங்குள்ள வசதிகளை மேலும் மேம்படுத்தி விருந்தோம்பலுடன் கூடிய வோட்டர்ஸ் எட்ஜ் நட்சத்திர ஹோட்டல் அனுபவத்தை எயிட்டி கிளப் ஊடாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!