குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Prabha Praneetha
2 years ago
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 276 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502,740 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 533,860 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 13,562 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.