விழிப்புணர்வுக்காக 200 பேர் ஆடையில்லாமல் போட்டோ ஷூட்

Prasu
4 years ago
விழிப்புணர்வுக்காக 200 பேர் ஆடையில்லாமல் போட்டோ ஷூட்

காலநிலை மாற்றத்தால் சுருங்கிய 'டெட் சீ' என்ற உப்பு கடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 200 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருப்பதுதான் 'டெட் சீ'. இதை உப்பு கடல் என்றும் அழைக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் இந்த டெட் சீ அதன் அளவில் சுறுங்கி விட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்த 200 பெண்கள், ஆண்களை நிர்வாணமாக்கி நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்ற புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆடையில்லாத 200 பெண்கள், ஆண்கள் மீது வெள்ளை நிறம் பூசப்பட்டு 'டெட் சீ'-யின் நிலப்பரப்பில் நிற்கவைக்கப்பட்டனர். இவரது முயற்சிக்கு மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் புகைப்படம் எடுக்கும்போது இந்த கடல் பரப்பளவு பெரிதாக இருந்தது. தற்போது அதன் அளவு சுருங்கிவிட்டது' என்று ஸ்பென்சர் ட்யூநிக் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4