அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள வேண்டுகோள்
Prabha Praneetha
2 years ago
பதவிக்காக மற்றும் ஒருவர் நியமிக்கப்படும் வரை தொடர்ந்தும் பதவியில் நீடிக்குமாறு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேனவை (Dr. Prasanna Gunasena) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksha) கேட்டுள்ளார்.
இன்னும் ஒரு மாதத்துக்குள் குறித்த பதவிக்காக புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் தாம் பதவி விலகவுள்ளதாக பிரசன்ன குணசேன முன்னதாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்த நிலையில்,இதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.