கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
Prabha Praneetha
2 years ago
இலங்கைக்குள் மேலும் 12 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த இறப்புக்கள் நேற்று ஒக்டோபர் 21ஆம் திகதி உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து நாட்டில் மொத்த கோவிட் இறப்புக்களின் எண்ணிக்கை 13ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று உறுதி செய்யப்பட்ட இறப்புக்களில் 7ஆண்களும், 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.