கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Prabha Praneetha
2 years ago
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பின்னிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகம் வரை சென்று ஜனாதிபதி, பிரதமர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கான மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.