எரிபொருள் விலையை அதிகரிக்க எந்தவித தீர்மானமும் இல்லை : உதய கம்மன்பில
Prabha Praneetha
2 years ago
எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு திட்டம் மற்று பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.