சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு கிழக்கில் சிரமதானம் முன்னெடுப்பு

#SriLanka
சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு கிழக்கில் சிரமதானம் முன்னெடுப்பு

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லண்டினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி .தயாநிதி செந்தில்நாதன் அவர்களின் 50 வது பிறந்த தினத்தினை ( 22- 10 -2021 )முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் 150000 ரூபாய் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவனம் (சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுநலன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் குடாநாட்டில் மாற்று வலுவுள்ளவர்களுக்கான அமைப்பாக இயங்கிவருகின்ற கருவி அமைப்பின் ( Karuvi Differently Abled ) அங்கத்தவர்களுக்கு அன்றைய தினம் பகல் உணவும் , உலருணவு பொதிகளும் வழங்கப்பட்டன . இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் திரு .கணபதி சர்வானந்தா அவர்களும் கலந்துகொண்டிருந்தார் .

அத்தோடு புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கோட்டைக்காடு வீதியும் , அதனோடு இணைந்து காணப்படுகின்ற ஒழுங்கையும் சூழகம் அமைப்பின் உறுப்பினர்களால் சிரமதான முறைமையின் கீழ் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன . மேற்படி வீதியானது இரு வருடங்களுக்கு முன்பு வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் இருபது லட்சம் செலவில் தார் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!