சுகாதார வழிமுறைகளை பின்பற்றாவிடின்...! சுகாதார அதிகாரி எச்சரிக்கை
குளியாப்பிட்டிய மருத்துவ அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 79 பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விரைவான ஆன்டிஜென் சோதனைகள் மூலம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்ததாக குளியாபிட்டிய பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உத்பல குணசேகர தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் எலத்தலாவ பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளது.
இப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவிற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டதாக டாக்டர் உத்பல குணசேகர மேலும் கூறினார்.
இன்று 15 புதிய கோவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சுகாதார அதிகாரி கூறினார்.
இதற்கிடையில், இன்று வரை 412 கோவிட் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.