இலங்கைக்கு வெகுவிரைவில் பெயர் மாற்றம் : தேரரின் முக்கிய தகவல்!!
Prabha Praneetha
2 years ago
முறையற்ற செயற்பாடுகளினால் இலங்கையின் பெயர் வெகுவிரைவில், “உலகின் குப்பைகள் களஞ்சியப்படுத்தும் நாடு” என மாற்றமடையும் என ஓமல்பே சோபித தேரர் (Omalpe Sobitha Thero) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சீனாவின் குவின்ங்டாவோ நிறுவனம், மற்றும் அதன் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்படும் உயிரிய சேதன பசளைக்கு நிதி செலுத்த வேண்டாம் என கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை உர நிறுவனம் மற்றும் சுற்றுசூழல் ஆய்வாளர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய வணிக மேல் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.