ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பம்

Prabha Praneetha
4 years ago
ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஆரம்பப் பாடசாலை மாணவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்னும் 6 முதல் 13 வரையிலான வகுப்புகளுக்குக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்கவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை அதிபர்கள், ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அரசாங்கம் ஒரு முறையின் கீழே 1 முதல் 5 வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது என்றும் குறித்த சில பாடசாலைகளில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4