இன்னும் இரண்டு மாதங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு
சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சீமெந்து விலையில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதை இரண்டு நாட்களில் நிறுத்த முடியாது. எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகும். சீமெந்துட் தட்டுப்பாட்டுக்கு டொலர் பிரச்சினை தான் காரணம். அதனால் விலையில் சிறிது உயர்வு இருக்கலாம்.
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீமெந்து விலை 1,098 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஆனால்இ கையிருப்பு சரியாக வரவில்லை என்றும், பல்வேறு விலைகளில் இதுபோன்ற கையிருப்பு பெறப்படுவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.