28.10.2021 இன்றைய ராசி பலன்

#Todayrasipalan #Dailyrasipalan #Rasipalan
Reha
2 years ago
28.10.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: குழந்தைகளால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடைபெறும்.
பரணி: பழைய நண்பர்களை சந்தித்துப் பேசுவதால் மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1: சிறு உழைப்பு பெரிய நன்மை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: உங்களின் முயற்சியால் சில நல்ல பலன்களை காண்பீர்கள்.
ரோகிணி: நண்பரிடம் எதிர்பார்த்த ஆறுதல் கிடைப்பதால் மகிழ்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: தன்னம்பிக்கையின்றி இருந்த நீங்கள் மெல்ல அதிலிருந்து மீளுவீரகள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பழைய தவறுகளால் ஏற்பட்ட உறுத்தல் நீங்கி நிம்மதி வரும்.
திருவாதிரை: உயர்அதிகாரி ஒருவரின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: உங்களின் தனி முயற்சியால் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: வாழ்வில் முன்னேறும் யுக்தியை நண்பர் உங்களுக்கு கற்றுக்கொடுப்பார்.
பூசம்: வாழ்வில் உதாரணமாக நினைப்பவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
ஆயில்யம்: மகிழ்ச்சியான சூழல் இருக்கும். புதிய மாற்றம் உண்டாகும் நாள்.

சிம்மம்: 
மகம்: மாணவர்களின் முயற்சிகள் சாதனையாக மாறக்கூடும்.
பூரம்: பணியாளர்கள் சிரமமான விஷயங்களையும் எளிதாக முடிப்பார்கள்.
உத்திரம் 1: உங்களின் ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உங்கள் திறமை தரும் வெற்றியால் புகழ் அதிகரிக்கும்.
அஸ்தம்: எதிர்காலத் திட்டம் உருவாகும். தம்பதி இடையே புரிதல் ஏற்படும்.
சித்திரை 1,2: தந்தையுடன் இருந்த வருத்தம் நீங்கி சுமுக உறவு ஏற்படும்.

துலாம்: 
சித்திரை 3,4: வாகனத்தை சீர் செய்வீர்கள். ரகசியம் ஒன்று தெரிய வரும்.
சுவாதி: முந்தைய சண்டை சச்சரவுகள் தீர்ந்து நிம்மதி ஏற்படுத்தும்.
விசாகம் 1,2,3: உங்களின் பொறுப்புகளை பிறர் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சிலருக்குப் புது வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.
அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்தபடியே அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கேட்டை: பலரது ஒத்துழைப்பால் நன்மை ஒன்று நிகழும். உங்களின் கனவு நனவாகும்.

தனுசு: 
மூலம்: சிந்தித்து சிறந்த முடிவுகளை எடுத்து மேலும் வெற்றி அடைவீர்கள்
பூராடம்: உங்களின் செயலால் உங்களுக்கே சிரமம் வராதபடி கவனமாயிருங்கள்.
உத்திராடம் 1: பணியாளர்களுக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: முன்பு செய்த பயணம் ஒன்றின் பலனாக நன்மை விளையும்.
திருவோணம் கடந்த கால அனுபவத்தால் உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: கோபத்தால் நன்மையை இழக்காதபடி கவனம் தேவை.

கும்பம்: 
அவிட்டம் 3,4: புதிய வாய்ப்பு உங்களை தேடிவரும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.
சதயம்: கோபத்தை அடக்கிக்கொண்டு வெற்றியடைய முயலுங்கள்.
பூரட்டாதி 1,2,3: உங்களால் நண்பர்களுக்கு சில நன்மைகள் உண்டாகும்.

மீனம்: 
பூரட்டாதி 4: இளைஞர்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியடையும் நாள்
உத்திரட்டாதி: உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தை பெற்று மகிழ்வீர்கள்
ரேவதி: நகை வாங்குவீர்கள். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும்.