சிறுபோக விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு - விவசாயத்துறை அமைச்சு

#SriLanka
சிறுபோக விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு - விவசாயத்துறை அமைச்சு

2020 ஆம் ஆண்டு சிறுபோக விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபை 37 கோடி ரூபா நட்டம் வழங்கியுள்ளது. நாடு தழுவிய ரீதியில் உள்ள 21,956 விவசாயிகளுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

நெல், சோளம்,பெரிய வெங்காயம்,மிளகாய்,சோயா,மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கு இயற்கையான முறையில் ஏற்படும் பாதிப்புக்கள மற்றும் வெள்ளப் பெருக்கு, யானை தாக்குதல் ஆகிய காரணிகளினால் ஏற்ப கருத்திற் கொண்டு எவ்வித காப்புறுதி அறவீடுகளுமில்லாத வகையில் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

நட்டஈடு வழங்கும் முறைமையில் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள் மற்றும் தீ பரவல் ஆகிய அனர்த்தங்களுக்கு உள்ளான ஒரு ஹேக்கர் காணிக்கு 200 ரூபா வீதம்செலுத்தி 40 ஆயிரம் காப்புறதியை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் யானை,பன்றி,மான்,முயல்,எலி,மயில் மற்றும் குரங்கு ஆகிய உயிரினங்களினால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்காக ஒரு ஹேக்கர் காணிக்கு 400 ரூபா செலுத்தி 40 ஆயிரம் ரூபா காப்புறதியை பெற்றுக் கொள்ள முடியும்.என விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4