இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் மக்களுக்கு, சில மோசடிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை வழங்குவதாகவும் தெரிவித்து சில மோசடிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சில சமயங்களில் அவர்கள் பல்வேறு கணக்குகளுக்குப் பெருந்தொகைப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீளப்பெற மத்திய வங்கியின் அனுமதியைப் பெறவேண்டி மட்டுமே இருப்பதாகவும் காட்டும் போலி ஆவணங்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.
இத்தகைய சில சந்தர்ப்பங்களில், மேற்படி பரிமாற்றங்களை நிறைவேற்றுவதற்காக தனிநபர் அடையாள இலக்கங்கள், அட்டை சரிபார்த்தல் இலக்கம், அதேநேர கடவுச்சொல், பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தொலைபேசி/ இணைய வங்கியியலின் அதேநேர கடவுச்சொல் உள்ளிட்ட கணக்கு விபரங்களை வாடிக்கையளர்களிடமிருந்து மோசடியாளர்கள் கோருகின்றனர்.