தனியார் பஸ் விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 13 பேர் காயம்
#Accident
Prathees
2 years ago
மாத்தளை- கொலென்னேவத்த பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தளையிலிருந்து செலகம வரை பயணித்த பஸ்ஸே இன்று பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தனியார் பஸ் மற்றுமொரு வாகனமொன்றுக்கு இடமளித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.