ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
#Mahinda Rajapaksa
#Colombo
Prathees
2 years ago
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று (28) பிற்பகல் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எங்கள் கடமையை நிச்சயம் செய்வோம் என இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.