சதொச வர்த்தக நிலையத்தை உடைத்து பால்மா பக்கெட்டுக்களை கொள்ளையிட்ட நபர்கள் யார்?

#Police
Prathees
2 years ago
சதொச வர்த்தக நிலையத்தை உடைத்து பால்மா பக்கெட்டுக்களை  கொள்ளையிட்ட நபர்கள் யார்?

காலி பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள சதொச வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகக் காலி பொலிஸார் தெரிவித்தனர்.

சதொச வர்த்தக நிலையத்தின் கண்ணாடியை உடைத்து சந்தேகநபர்கள் உள்ளே நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடைக்குள் நுழைந்த சில நிமிடங்களில், அவர் ஒரு பையில் பல பால் பவுடர் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!