சுவிற்சர்லாந்தில் 27 இந்து சைவ, கோவில்கள் உருவாக காரணமானவருக்கு கௌரவிப்பு - யார் அவர்? (Photos)

Reha
4 years ago
சுவிற்சர்லாந்தில் 27 இந்து சைவ, கோவில்கள் உருவாக காரணமானவருக்கு கௌரவிப்பு - யார் அவர்? (Photos)

சுவிஸ்சர்லாந்திற்கு அகதியாக வந்த இலங்கை இந்து, சைவர்களுக்கு அவரவர் தமது, மதம், மொழியை ஒழுக, அதன் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல , சுவிசிலே பிறந்து, வாழ்ந்து ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக இருந்தும், அடுத்த மனிதர்களின் மனதின் ஏக்கத்தைப் புரிந்து அவர்களின் மத அடிப்படையான நகர்வை மேற்கொள்ள அயராது துவேசமின்றி உழைத்த பாதிரியாரை பலர் மற‌ந்திருக்கலாம். இருந்தும் அவரை இவ்வேளையில் கம்பன் கழகம் இனம் கண்டு, அவரிற்க்கு மரியாதை செலுத்தியுள்ளது சிறப்பே. 

சுவிஸ்சர்லாந்திலே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட முருகன் கோயில் ஆரம்பிப்பதற்கு முற்றும் முழுதாக உழைத்த மாமனிதர்   கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பாதிரியார் பெர்டோர் வெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இதற்க்கு சூரிச் டூர்டென் கிரமத்தில் இருந்து அருள்பாலிக்கும் விஷ்னு துர்க்கை அம்மன் ஆலய மடாதிபதி சிறீ சரஹணபவானந்த குருக்கள்,  மதிப்புக்குரிய சர்மா ஐயா அவர்களின் சிறப்பு உழைப்பு சிவிற்சர்லாந்து நாட்டில் 27 ஆலயங்கள் உருவாகவும் அதற்கு அரச அனுமதி கிடைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டதை இதய சுத்தியுள்ள எவராலும் மறுக்க முடியாது. அதை தாண்டி அவரது உலகளாவிய இலங்கை தமிழர்களுக்கான சேவைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருப்பதும், அதனால் சில விசமிகளான  செடிகளால் அவருக்கு ஏற்ப்பட்ட, ஏற்படும் இடியூறுகளும் அறிந்ததே. 
இப்படி தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதும் பொதுநல விரும்பிகளை நாமும் ஆதரிப்போமாக.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4