களுத்துறை கடலில் நச்சு கரிம உரங்களை ஏற்றிச் சென்ற சீனக் கப்பல்
#China
Prathees
2 years ago
நச்சுத்தன்மை வாய்ந்த கரிம உரப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 'ஹிப்போ ஸ்பிரூட்' என்ற சீனக் கப்பல் இன்று பிற்பகல் களுத்துறைக்கு அண்மித்த கடலில் பயணித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை சர்வதேச கடல் போக்குவரத்து இணையதளமான 'மரைன் டிராபிக் குளோபல் ஷிப்' உறுதி செய்துள்ளது.
இலங்கையை அவ்வப்போது சுற்றி வரும் சீன உரக்கப்பல், நேற்று இலங்கை மேற்கு கடற்பரப்பை நோக்கி பயணித்து கொண்டிருந்தது.
இந்தக் கப்பலில் இருந்து உரத்தைப் பெற இலங்கை மறுத்த நாள் முதல் இலங்கைக் கடற்பரப்பை நெருங்கிக்கொண்டு இப்படிப் பயணிக்கிறது.