சஜித் தலைமையில் மக்கள் ஆட்சி மலரும்! - திகா எம்.பி. சூளுரை

Prasu
2 years ago
சஜித் தலைமையில் மக்கள் ஆட்சி மலரும்! - திகா எம்.பி. சூளுரை

"மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாஸ தலைமையில் மக்களுக்கானதொரு அரசு உருவாகும்.”

- இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பொய்யுரைத்து அதன் மூலம் ஆட்சியை முன்னெடுப்பதற்கே இந்த அரசு முயற்சிக்கின்றது. இன்று பொய் கூறுவதில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றுள்ளது.

நாட்டு மக்களுக்குத் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். மக்கள் போராட்டங்கள் மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் தலைமையில் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசொன்றை நாம் உருவாக்குவோம்.

சேதன பசளைத் திட்டத்தை ஒரே நாளில் செயற்படுத்தவிட முடியாது. அதற்கு நீண்டகாலத் திட்டம் வேண்டும். ஒரே தடவையில் செய்வதற்கு முற்பட்டதால்தான் இன்று விவசாயிகள் போராடுகின்றனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உடனடியாக உரத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!