சூட்கேஸ் கொலைக்கு பிறகு இலங்கை பெண்கள் பற்றி வெளியான தகவல்
#Women
Prasu
2 years ago
இலங்கையில் கடந்த சில மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1500 பெண்கள் காணாமற் போனமை பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன பெண்களில் திருமணமானவர்களும் அடங்குவர். சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.