எனது முகத்துக்காக மக்கள் வாக்களிக்கவில்லை! நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தார்கள்- ஜனாதிபதி
Prabha Praneetha
2 years ago
ஜனாதிபதி தேர்தலின் போது 69 இலட்சம் மக்கள் என் முகத்திற்காக வாக்களிக்கவில்லை, சுபீட்சமான கொள்கை திட்டத்தின் உள்ளடக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எதிர்பார்ப்பிற்கமைய புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அது கடினமானதாக அமைந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏனெனில் அதுவே நிலையானது என்றும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.