16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Keerthi
4 years ago
16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டிலுள்ள 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம், காலி, மாத்தறை மாவட்டங்கள் தவிர, மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களின் சில பிரதேசங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மாகாணம், காலி, மாத்தறை, மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4