கல்விக்காக பட்ஜெட்டில் பாரியளவு நிதி ஒதுக்கம்

#Basil Rajapaksa
Prathees
4 years ago
கல்விக்காக பட்ஜெட்டில் பாரியளவு நிதி ஒதுக்கம்

இந்த வருடத்திற்கான மொத்த செலவீனத்தில் 7.51% கல்விக்காக ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்விக்காக இவ்வளவு தொகை ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டார்.

இது மிகவும் கடினமானது என்றாலும், இந்த பட்ஜெட்டில் இருந்து முழு பரிந்துரைக்கப்பட்ட தொகையை ஒதுக்குவோம் என்று நம்புகிறோம்.இதன் காரணமாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக, அதாவது 30 பில்லியன் ரூபாவை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் நாம் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒதுக்கவுள்ளோம்.

வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக மொத்த வரவு செலவு திட்டத்தில் 6 சதவீதத்திற்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது. இம்முறை வரவு செலவு திட்ட மொத்த செலவில் 7.51 சதவீதம் கல்விக்கு நாம் ஒதுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4