பல நீர்த் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Prabha Praneetha
4 years ago
பல நீர்த் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. 

அதற்கமைய, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொல்கொல்ல மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4