2500 கால்நடைகள் விரைவில் இறக்குமதி
#SriLanka
Prathees
2 years ago
2500 கறவை மாடுகள் விரைவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கால்நடைகளை இறக்குமதி செய்ய நான்கு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்காக கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நான்கு காணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் அதற்கான வசதிகளை மாத்திரமே செய்து வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.