15.11.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Prasu
2 years ago
15.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: அரசாங்க விஷயத்தில் திடீரென்று நன்மை ஒன்று கிடைக்கும்.
பரணி: தொலைபேசி வழி செய்தி மகிழ்ச்சியை தரும். பரபரப்பு கூடும்.
கார்த்திகை 1: முயற்சி கைகூடும். நெருக்கமானவருக்காக செலவு செய்ய முன்வருவீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வந்து மகிழ்விக்கும்.
ரோகிணி: வங்கி வேலைக்காக காத்திருந்தோருக்கு அப்பணி கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: பணியில் உள்ள ஆர்வம் காரணமாக அது பற்றி மேலும் கற்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினர்கள் நடந்துகொள்ளும் முறை மனத்திருப்தி தரும்.
திருவாதிரை: ஆன்மிக நாட்டம் அதிகரிப்பதாகத் தோன்றும். பயம் நீங்கும்.
புனர்பூசம் 1,2,3: உங்களின் புது முயற்சி நல்ல வகையில் செல்லும். உற்சாகம் கூடும்.

கடகம்: 
புனர்பூசம் 4: முயற்சிகள் சற்று நிதானமாகப் பலன் தந்தாலும் முழு நிறைவு தரும்.
பூசம்: குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
ஆயில்யம்: சந்தோஷமான சம்பவங்கள் நிகழ்ந்து நிம்மதி அளிக்கும்.

சிம்மம்: 
மகம்: எதையும் பலமுறை நன்கு யோசித்து செய்வது அவசியம்.
பூரம்: வம்பில் தலையிட வேண்டாம். புதிய விஷயத்தை ஒருநாள் தள்ளிப்போடுங்கள்.
உத்திரம் 1: எதிர்பாராத நன்மை நாடி வந்து இதயத்தை மகிழ்விக்கும் நாள்.
 

கன்னி: 
உத்திரம் 2,3,4: முயற்சி காரணமாக உங்களுக்கு மேன்மையும், உயர்வும் கிடைக்கும்.
அஸ்தம்: சில நாட்களாக மனதில் இருந்து வந்த மனஅழுத்தம் நீங்கும்.
சித்திரை 1,2: குழந்தைகளின் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டு நிறைவளிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: உறவினர் ஒருவர் நல்ல செய்தியை சொல்லி உங்களை மகிழ்விப்பார்
சுவாதி: உறவினர், நண்பருடன் தொலைதுார சுற்றுலா மேற்கொண்டு மகிழ்வீர்கள்.
விசாகம் 1,2,3: உறவினரின் பாச மழையில் நனைவீர்கள். பணியில் இருந்த சங்கடம் தீரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: வீடு சம்பந்தமான முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
அனுஷம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரமப்பட்டாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
கேட்டை தொழில் ரீதியாக புதிய ஊர்களுக்கு செல்வீர்கள். உங்களது முயற்சி பலிக்கும்.

தனுசு: 
மூலம்: விலகிச் சென்றவரை பற்றி கவலைப்படவேண்டாம். அவரை புறக்கணியுங்கள்.
பூராடம்: நல்லவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உத்திராடம் 1: ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அவசியமா என்று யோசியுங்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உடல் நலனில் கவனம் தேவை. தாயாரால் நன்மை ஏற்படும்.
திருவோணம்: மனஉறுதியுடன் செயல்பட்டு கஷ்டத்தில் இருந்து வெளிவருவீர்கள்.
அவிட்டம் 1,2: அனுபவம் மிக்கவரின் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.

கும்பம்: 
அவிட்டம் 3,4: நீண்ட நாளைய பிரச்னை ஒன்று உங்கள் முயற்சியால் தீரும்.
சதயம்: பக்குவமாகப் பேசி அனுமதி ஒன்றைப் பெறுவீர்கள். எதிலும் அவசரம் வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு ஏற்பட்டிருந்த தொல்லை அகலும் நாள்.

மீனம்: 
பூரட்டாதி 4: சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் நல்ல முடிவை எட்டும்.
உத்திரட்டாதி: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி அரசாங்கத்திடம் இருந்து வரும்.
ரேவதி: நல்ல விஷயம் ஒன்றில் உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு.