கொழும்பு நீதவானின் அதிரடி உத்தரவு!
Prabha Praneetha
2 years ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பியசிறி விஜேநாயக்க(Wijenayake, Piyasiri), வீரகுமார திசாநாயக்க(Weerakumara Dissanayake) மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராயர் செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாதமையினால் இன்று இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்கள் தொடர்பிலான வழக்!கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.