வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு
Prabha Praneetha
2 years ago
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வெட்டுக் காயங்களுடன் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அவதானித்த அயலவர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.