இலங்கையை விட்டு வெளியேற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

#SriLanka
Prathees
2 years ago
இலங்கையை விட்டு வெளியேற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் சந்தர்ப்பம் கிடைத்தால் இடம்பெயர விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

intitute far health policy இன்  ஆய்வின் சில கண்டுபிடிப்புகள் ஆபத்தானவை

இந்நாட்டின் படித்த இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் ஆசை 50% ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அறிக்கையின்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 34% பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தைக் கொண்டுள்ளனர்இ அவர்களில் 24% பேர் ஏற்கனவே அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் 20% பேர் இன்னும் நாட்டை விட்டு வெளியேறும் முறைகளைப் பின்பற்றுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
நாட்டில் 22% பெண்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதுடன் அவர்களில் 22 வீதமானோரும் அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, இலங்கை சனத்தொகையில் ஐம்பத்து மூன்று வீதமானவர்கள் இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பைக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் மிகவும் அச்சமூட்டும் உண்மையாகும்.

கடந்த மூன்று ஐந்து வருடங்களில் இலங்கையர்களின் வெளிநாடு செல்வதற்கான அபிலாஷைகள் இரட்டிப்பாகியுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்து, உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாடு மீண்டு வருவதால், பொதுமக்களின் கருத்தை மதிப்பிடுவதற்கு இந்தக் கணக்கெடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது.

அரசாங்கத்திற்கு வாக்களித்த இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்தை இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடு செல்வதில் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து சரியானது என கணக்கெடுப்பு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!