6 பேரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்து ஒருவர் பலி: ஐவர் படுகாயம்

#Accident
Prathees
2 years ago
6 பேரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்து ஒருவர் பலி: ஐவர் படுகாயம்

ஹொரணை - மத்துகம வீதியில் வெல்கம டவட்டகஹவத்த வீதியின் சந்திக்கு அருகில் நேற்று (28ம் திகதி) ஆறு பேருடன் சென்ற  முச்சக்கர வண்டி  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2 வயது சிறுமி உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெந்தோட்டயில் வசிக்கும் வர்த்தகரான 46 வயதான அனுர சமந்த குணவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்இ இரண்டு மகன்கள் (சாரதி உட்பட)இ ஒரு மகள் மற்றும் அவரது மகளின் சிறுமி அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியின் தாய், சகோதரி மற்றும் மகள் ஆகியோர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிப்பதால் பெந்தோட்டைக்கு அழைத்து வர, தனது சகோதரர் மற்றும் அயலவர் ஒருவருடன் எம்பிலிப்பிட்டிக்கு சென்று விட்டு பெந்தோட்டையில் உள்ள வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியைத் தவிர நான்கு பெரியவர்கள் பின் இருக்கையில் சிறுமியுடன் பயணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை - மத்துகம வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி வெல்கம தவதகஹவத்த சந்தியில் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.