பயங்கரவாதத் தடுப்புக் காவல் மையமாக புதிய இடம்!
Mayoorikka
2 years ago
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவோரைத் தடுத்துவைப்பதற்கான புதிய மையமொன்று குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கிருலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 149, கிருலப்பனை அவனியு, கொழும்பு 05 என்ற இடமும் பயங்கரவாதத் தடுப்புக் காவல் மையமாக செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் டிசம்பர் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.