அரிசிக்கு தட்டுப்பாடு! வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

Mayoorikka
2 years ago
அரிசிக்கு தட்டுப்பாடு! வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் கட்டுக்கதை என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று புறக்கோட்டையில் உள்ள அரிசி களஞ்சியசாலைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.

நாட்டிற்கு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்து வருவதாகவும், அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.