வாரியபொல பிரதேச சபையில் ஏற்பட்ட முறுகல்நிலைக்கு இதுதான் காரணம்
Prathees
2 years ago
வாரியபொல பிரதேச சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தின் போது நேற்று (30) முறுகல் நிலை ஏற்பட்டது.
இரண்டு தடவைகள் வரவு செலவுத் திட்டத்தில் தோல்வியடைந்த பிரதேச சபை தவிசாளர் தொடர்ந்தும் தவிசாளர் பதவியில் நீடிக்க முடியாது என பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்திருந்த நிலையில், வாரியபொல பிரதேச சபையின் பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.
41 பிரதேச சபை உறுப்பினர்களில் 21 பேர் தலைவரை எதிர்த்ததால் மோதல் வெடித்தது.
அவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் அடங்குவர்.