கார் விபத்தில் சிறு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
பண்டாரகம, கம்மன்பில வெவைக்கு அருகில், மற்றுமொரு வாகனத்தை கடந்து செல்ல முற்பட்ட போது, வேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானது.
டிப்பர் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த சிறு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தின் போது, கார் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
என்று கார் மீட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பு - கல்கந்த, புதுக்குடியிருப்பு - முள்ளியவெளி, பேலியகொட, ஹோமாகம, ஹபரணை, பின்னவல மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
அவர் வவுனியாவில் வசிக்கும் 32 வயதுடையவர்.
முச்சக்கர வண்டி மற்றும் கெப் வண்டியின் இரு சாரதிகளின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தையடுத்து, அப்பகுதி மக்கள் யாழ்.கண்டி பிரதான வீதியை மறித்து கெப் வண்டியின் சாரதியை கைது செய்யுமாறு கோரி சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (02) அதிகாலை 4.30 மணியளவில் வெல்மில்ல பகுதியில் உள்ள கல்வெட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்கள் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் மற்றும் கண்டியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.