கடனை அடைப்பதில் உறுதியாக இருந்தாலும் நாட்டைக் காப்பாற்ற உறுதியில்லை: பொருளாதார நிபுணர்
இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்துவதில் உறுதியாக இருந்தாலும், நாட்டைக் காப்பாற்றுவதில் அர்ப்பணிப்புடன் இல்லை என பொருளாதார நிபுணர் கலாநிதி நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கான கடனை மீளச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது.கடனை எவ்வளவு திருப்பிச் செலுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக கையிருப்பு குறைகிறது. உடனடி நடவடிக்கையாக கடன் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டும்.
500 மில்லியன் டாலர்களை செலுத்திய பிறகு நாடு மற்றொரு நெருக்கடியை நெருங்குகிறது.ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினாவிலும் இந்த பிரச்சனை இருந்தது.
கடனை அடைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதே எங்கள் பிரச்சனை. நாட்டைக் காப்பாற்ற உறுதியில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை. 2022 ஜனவரி 18ஆம் திகதியுடன் காலாவதியாகும் சர்வதேச இறையாண்மைப் பத்திரத்தைத் தீர்ப்பதற்குத் தேவையான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இலங்கை செலுத்த உள்ளது.
ஃபிட்ச் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் நீண்ட கால அந்நியச் செலாவணித் திருப்பிச் செலுத்தும் அபாயம் குறித்து இலங்கை அண்மையில் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.