இன்றைய வேத வசனம் 06.01.2022

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 06.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் (ஆதியாகமம் 26:24).

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். (ஏசாயா 41:13,14).

"பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" (2 இராஜாக்கள் 6:16).

பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல.. நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; (2 நாளாகமம் 20:17).

பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; (உபாகமம் 31:6).

பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. புறஜாதிகளுக்குள், ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; (சகரியா 8:13)

ஆபிராமே, நீ பயப்படாதே; (ஆதியாகமம் 15:1)

தானியேலே, பயப்படாதே; (தானியேல் 10:12)

ஆகாரே, நீ பயப்படாதே; (ஆதியாகமம் 21:17)

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.