குழந்தைகளுக்கும் "கொரோனா தடுப்பூசி" கட்டாயம்.. வெளியான அதிரடி தகவல்..!!

Keerthi
2 years ago
குழந்தைகளுக்கும் "கொரோனா தடுப்பூசி" கட்டாயம்.. வெளியான அதிரடி தகவல்..!!

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த பிரேசில் அரசு அனுமதி கொடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரேசிலிலும் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரேசில் அரசாங்கம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் பிரேசில் தெரிவித்துள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்