கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!-சீன வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Prabha Praneetha
2 years ago
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!-சீன வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அடங்கிய விசேட விமானம் ஒன்று நேற்று (08) இரவு இலங்கை வந்தடைந்தது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினரை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார்.

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இரவு கொழும்பு துறைமுக நகருக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது துறைமுக நகரத்தில் பல திறப்பு வைபவங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாட்டின் உயர் அதிகாரிகள் சிலரையும் அவர் சந்திக்க உள்ளார்.

இதேவேளை, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவு தினம் இங்கு நினைவுகூரப்படவுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது பல முதலீட்டு யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்