நாயாறு கடல் எல்லையில் மிதந்து வந்த பாரிய பாடகு எங்கிருந்து வந்தது?
#Police
Prathees
2 years ago
முல்லைத்தீவு நாயாறு கடல் எல்லையில் அடையாளம் தெரியாத படகு ஒன்று கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று நாயாறு மீனவர்கள் படகு ஒன்றை பார்த்ததுடன்இ இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் ஆய்வு செய்ததில், அது இரும்பு பாலம் படகு என்பது தெரியவந்தது.
சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இந்த படகு எந்தப் பகுதியில் இருந்து மிதந்து வந்திருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை, இது யாருக்கு சொந்தமானது என்பதும் தெரியவில்லை.
படகு பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை கரைக்கு இழுப்பதற்கு கடற்படையினரின் உதவி வழங்கப்படுவதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.