கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் கரையொதுங்கிய சடலங்கள் !

#Colombo
Nila
2 years ago
கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் கரையொதுங்கிய சடலங்கள் !

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணத்துடன் ஆணின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய சடலம் பம்பலப்பிட்டி மெரைன் டிரைவ் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு சடலங்களும் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்