வழமைக்கு திரும்பிய மலையக புகையிரத சேவைகள்
Prabha Praneetha
2 years ago
மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று முற்பகல் தடம்புரண்டது.
இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த புகையிரத பாதை நேற்றிரவு சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மீண்டும் புகையிரதங்கள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்