கந்தளாய் குளத்தில் 4 வான் கதவுகள் திறப்பு

Prabha Praneetha
2 years ago
கந்தளாய் குளத்தில் 4 வான் கதவுகள் திறப்பு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் குளத்தில் 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

கந்தளாய் குளத்தின் நீரினைப் பயன்படுத்தி 16,750 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது..

கரையோரத்தில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்