கொழும்பில் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

#SriLanka
Nila
2 years ago
கொழும்பில் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பேருந்து போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பாணந்துறை - மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பேருந்து ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.