நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதான பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

#SriLanka
Nila
2 years ago
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதான பெண்  மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிதி மோசடி தொடர்பபாக வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

46 வயதுடைய குறித்த பெண் 60 மில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்