விமான நிலைய ஊழியர்கள் ரூ.25,000 ஊதிய உயர்வு கோரிக்கை
#SriLanka
#Airport
#Employees
Mugunthan Mugunthan
2 years ago
இலங்கை சுதந்திர தொழிற்சங்கம் (SLFTUU) இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடும் ஊழியர் சந்திப்பை நடத்தியது.
25,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 11 விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த விடயங்களை விமான நிலைய அதிகார சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் தலைவர் எம்.டபிள்யூ.டி.முஹந்திரம் தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலைய எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பாதுகாத்தல் மற்றும் விமான நிலைய வாகன நிறுத்துமிடங்களை மீளப் பெறுதல் போன்ற கோரிக்கைகள் இவர்களது கோரிக்கைகளாகும்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.