மின்சாரம் தடைபட்டால் தடையில்லா குடிநீர் வினியோகமும் தடைபடும்

#SriLanka #Electricity Bill #water
மின்சாரம் தடைபட்டால் தடையில்லா குடிநீர் வினியோகமும் தடைபடும்

மேலும் மின்வெட்டு ஏற்பட்டால் தடையில்லா நீர் விநியோகம் தடைபடும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மின்சாரம் இல்லாமல் தண்ணீர் எடுக்க முடியாது என்றார்.

டொலர்களை வழங்கினால் மாத்திரமே மின் உற்பத்திக்கான எரிபொருளை வழங்க முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்று மின்சாரம் தடைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மட்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படும் என மின்சார வாரியம் நேற்று தெரிவித்தது.

இது தொடர்பான கால அட்டவணையையும் இலங்கை மின்சார சபை நேற்று வெளியிட்டது. மின்சார விநியோகத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து நான்கு மணித்தியாலங்களுக்குள் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.