யாழில் பரிதாபமாக உயிரிழந்த சிசு-வெளியான அதிர்ச்சிக் காரணம்!
#Jaffna
Nila
2 years ago
யாழ்ப்பாணம் – சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபகரமாக உயிரிழந்தது.
நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரையில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கால் இரத்தம் வந்துள்ளது.
மூச்சுபேச்சு இன்மையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே சிசு இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது
மரண விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதுடன், பால் புரைக்கேறியே சிசு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.