இலங்கை இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #India
Nila
2 years ago
 இலங்கை இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி திட்டம் தொடர்பான இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மக்கள் பார்வைக்காகபல இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த நான்கு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த 6ஆம் திகதி நிதியமைச்சில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சிலோன் இந்தியன் ஓயில் நிறுவனம் மற்றும் டைரன்கோ பெற்றோலியம் டெர்மினல் நிறுவனம் ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


 எரிசக்தி அமைச்சரின் www.udayagammanpila.com இணையத்தளம், எரிசக்தி அமைச்சின் இணையத்தளமான www.energymin.gov.lk மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளமான www.ceypetco.gov.lk ஆகியவற்றின் ஊடாக இந்த உடன்படிக்கையை பார்வையிட முடியும். அத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்